பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சைக்கிள் பேரணி சென்றனர்.
எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர், கான்ஸ்டியூசன் கிளப்பில் இருந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் வரை சைக்கிள் பேரணி சென்றனர்.
பெட்ரோல்-டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில். நடைபெற்ற பேரணியில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.