மேலகாசாக்குடி அரசு நடுநிலைப்பள்ளி காலை 9 மணிவரை திறக்கப்படாததால் மாணவர்கள் சுவர் ஏறிக்குதித்து பள்ளிக்குள் சென்றனர்.
காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் கதவுகள் காலை 9 மணிவரை திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சிலர் சுவர் ஏறிக்குதித்து பள்ளிக்குள் போகும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.