வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு... கண்ணீர் விட்டு அழுத புதுவை அதிமுக வேட்பாளர்!

வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு... கண்ணீர் விட்டு அழுத புதுவை அதிமுக வேட்பாளர்!
வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு... கண்ணீர் விட்டு அழுத புதுவை அதிமுக வேட்பாளர்!

வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்ததால் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் மக்கள் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதார். 

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் நெல்லித்தோப்பு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில், உருளையான்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளதாகக் கூறி ஆதரவாளர்கள் மத்தியில் கண்ணீர் மல்க பேசினார்.

கடந்த 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனக்கு, அதே தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை என கண்ணீர் வடித்தார். கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகன், தன்னை கட்சியில் இருந்து அகற்றுவதற்காக சதித்திட்டம் தீட்டி, தொகுதி மாறி போட்டியிட வைத்துள்ளதாக ஓம்சக்தி சேகர் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com