மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதனை மிக மிக கவனமாக கையாள வேண்டிய நிலை உள்ளது.