''கோவை பகுதியில் சாதிய படிநிலை தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது'' - பா.ரஞ்சித்

''கோவை பகுதியில் சாதிய படிநிலை தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது'' - பா.ரஞ்சித்
''கோவை பகுதியில் சாதிய படிநிலை தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது'' - பா.ரஞ்சித்

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் சாதிய படிநிலை மிகத் தீவிரமாக கடைபிடிக்கப்படுவது கவலை தருவதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் உள்ள சித்ரா அரங்கில் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றினர். நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கலாசார பிரச்னையை அணுகுவதே நீலம் பண்பாட்டு மையத்தின் நோக்கம் என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் தெருக்களில் உள்ள இசை வடிவங்களுக்கெல்லாம் ஒரு தகுதி உருவாக்கப்பட்டு, சில இசை வடிவங்களை தீட்டு என்று குறிப்பிட்டு தகுதி குறைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த கேள்விக்கு, பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று பா.ரஞ்சித் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com