ஓடிசாவில் நிகழ்ந்த ரயில் கோர விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முழுவதுமாக மீட்கப்பட்டு விட்டார்களா அல்லது யாரேனும் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளார்களா எனற் விபரங்கள் முழுமையாக தெரிந்த பிறகே அவர்கள் அங்கிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கு மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில், 96 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 பேருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை.