வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு: பேரணாம்பட்டு பகுதி மக்கள் அச்சம்

வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு: பேரணாம்பட்டு பகுதி மக்கள் அச்சம்
வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு: பேரணாம்பட்டு பகுதி மக்கள் அச்சம்

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வேலூரில் ஏற்கெனவே கடந்த மாதம் 29 ஆம் தேதியும், டிசம்பர் 23 ஆம் தேதி அதிர்வு ஏற்பட்டது. இந்த அச்சத்தில் இருந்து பொதுமக்கள் மீளாத நிலையில், இன்று காலை மீண்டும் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், வீடுகள் லேசாக குலுங்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இது மூன்று விநாடிகள் வரை நீடித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com