கோவை: தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய மயூரா ஜெயக்குமார்

கோவை: தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய மயூரா ஜெயக்குமார்
கோவை: தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய மயூரா ஜெயக்குமார்

கோவையில் நடந்த சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றி, பின்னர் சுதாரித்துக் கொண்டு மீண்டும் சரியான முறையில் கொடியினை ஏற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, மயூரா ஜெயக்குமார், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றியுள்ளார். இதனைக் கண்டவர்கள், உடனடியாக தெரிவித்ததால், கொடியினை கீழே இறக்கி, சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது.

இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனிடையே கொண்டாட்டங்களின்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாகக்கூறி, மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 17பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com