முழு முடக்கம்: கோயிலுக்கு வெளியே நடைபெற்ற திருமணங்கள்

முழு முடக்கம்: கோயிலுக்கு வெளியே நடைபெற்ற திருமணங்கள்

முழு முடக்கம்: கோயிலுக்கு வெளியே நடைபெற்ற திருமணங்கள்
Published on

தமிழ்நாடு முழுவதும் பொது முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், கடலூர் அருகே திருவந்திபுரத்தில் கோயிலுக்கு வெளியே பல திருமணங்கள் நடைபெற்றன.

பிரசித்திப் பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் இன்றைய தினம் திருமணங்களை நடத்த பல குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், முழு முடக்கம் அமலில் உள்ளதால், அவர்கள் கோயிலுக்கு வெளியே சாலையில் திருமணங்களை நடத்தினர். சுபகாரியங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com