தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், ஊழலுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தைப் போன்றது என மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்குப் பிரத்யேகப் பேட்டியளித்த அவர், வாக்காளர்களை திசைதிருப்ப பிற கட்சிகள் வேண்டாதவற்றை பரப்புரை செய்வதாகவும் ஆளுமைத் திறனைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.