மத்தியப் பிரதேசத்தில் வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர், வெள்ளத்தில் சிக்கினார். வீட்டின் மொட்டை மாடி வழியாக ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் அவரை மீட்டனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் இரண்டு மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மத்தியப் பிரதேசம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் நரோதம் மிஸ்ரா வெள்ளத்தில் சிக்கினார். இதனையடுத்து வீட்டின் மொட்டை மாடி வழியாக ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் அவரை மீட்டனர்.