கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் 75 இசைக்கலைஞர்கள் இணைந்து, 75 நிமிடங்கள் இசைக்கருவிகளை வாசித்து உலக சாதனை நிகழ்த்தினர்.
பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம், கிராமிய புதல்வன் அகடாமி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உடுக்கை போன்ற இசைக்கருவிகளை 75 கலைஞர்கள் வாசித்தனர்.