கன்னியாகுமரி: அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

கன்னியாகுமரி: அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு
கன்னியாகுமரி: அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேலய்யா, தம்புரான் கம்பெனி தெரு வழியாக நடந்து சென்றார். இரவு பெய்த கனமழையால் அறுந்த மின்கம்பி ஒன்று, அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து கிடைந்துள்ளது. இதை அறியாத வேலய்யா எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பியை மிதித்தபோது உயிரிழந்தார்.

மின்கம்பி அறுந்துவிழுந்தபோதே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால் வேலய்யாவின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே இச்சம்பவத்துக்குக் காரணம் என குற்றம்சாடியுள்ள அவர்கள், வேலய்யாவின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com