தேர்தல் பரப்புரையை தடுப்பதற்காக தனது காருக்கு அடியில் பட்டாசு வெடித்து அமமுகவினர் அராஜக செயலில் ஈடுபடுவதாக அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் வேட்பாளருமான கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது உயிருக்கு அமமுகவினர் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறியிருக்கிறார்.