ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து அமீரகத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சிஎஸ்கே வீரர் ருது ராஜுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை அணிக்கு பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ருது ராஜ், 635 ரன்கள் குவித்ததோடு ORANGE CAP மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதையும் வென்றார். இந்நிலையில் சொந்த ஊரான புனேவிற்கு திரும்பிய ருதுராஜுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.