பழமையான அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் எலிகளுக்கு உணவாகி வருவதால் அதனிடம் இருந்து எப்படிதான் ஆவணங்களை காப்பாற்றுவது என ஊழியர்கள் விழிப்பிதுங்கிப் போயிருப்பார்கள். ஆனால் கர்நாடகாவின் கவுரிபிதனூரில் உள்ள காவல் நிலைய போலீசாருக்கு அந்த கவலை இருக்காது. ஏனெனில் போலீசாருக்கே காவலாக பீரா என்ற பூனையை நியமித்திருக்கிறார்கள் கவுரிபிதனூர் போலீசார்.