இமாச்சல பிரதேச நிலச்சரிவில் 13 பேர் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

இமாச்சல பிரதேச நிலச்சரிவில் 13 பேர் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சல பிரதேச நிலச்சரிவில் 13 பேர் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

இமாசல பிரதேச மாநிலம் கின்னாரில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மலையை ஒட்டிய பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அச்சுறுத்தும் படக்காட்சிகளும் வெளியாகியள்ளன. மலையின் மீதிருந்து சில கற்கள் உருண்டு கீழே விழும் நிலையில் அடுத்த சில நிமிடங்களில் மலையிலிருந்து மண் பாளம்பாளமாக விழுகிறது. மலையை ஒட்டி நின்றிருந்த வாகனத்தில் இருந்த 8 பேரும் இந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தவிர இதுவரை மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மண் குவியலுக்குள் 25 முதல் 30 பேர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com