மோசமான வானிலை - சத்தியமங்கலம் விளைநிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

மோசமான வானிலை - சத்தியமங்கலம் விளைநிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

மோசமான வானிலை - சத்தியமங்கலம் விளைநிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பெங்களூருவைச் சேர்ந்த பாரத் என்பவர் உடல்நலம் சரியில்லாத தமது மனைவியை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக வாடகை ஹெலிகாப்டர் மூலம் சென்றார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி மேல் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக சரிவர சிக்னல் கிடைக்கவில்லை. இதனையடுத்து பைலட்டான ஜஸ்பால் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்கினார்.

ஹெலிகாப்டர் விவசாய விளை நிலத்தில் தரையிறங்குவது கண்ட மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகே சென்று பார்த்தபோது ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் பத்திரமாக வெளியிறங்கி வந்ததை கண்டு நிம்மதியடைந்தனர். கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com