புதிய கடல்வள மசோதாவுக்கு எதிர்ப்பு - மெரினா கடற்கரையை முற்றுகையிட்டு போராட்டம்

புதிய கடல்வள மசோதாவுக்கு எதிர்ப்பு - மெரினா கடற்கரையை முற்றுகையிட்டு போராட்டம்
புதிய கடல்வள மசோதாவுக்கு எதிர்ப்பு - மெரினா கடற்கரையை முற்றுகையிட்டு போராட்டம்

புதிய கடல்வள மசோதாவுக்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய கடல்வள மசோதா நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராடங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை மீனவர்கள் பேரணியாகச் சென்றனர்.

அதன்பின் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக மெரினா கடற்கரையையும் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றனர். மெரினா கடலில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏற்றியும் மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com