மேற்குவங்கம்: வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

மேற்குவங்கம்: வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்
மேற்குவங்கம்: வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கிறார்கள். கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்..

முன்னதாக அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது. கொரோனா காலம் என்பதால் இரு மாநிலங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இன்று துவங்கி, அடுத்த மாதம் 29 வரை, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com