’என் சாவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்’-நிதிநிறுவன ஊழியர் விபரீத முடிவு

’என் சாவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்’-நிதிநிறுவன ஊழியர் விபரீத முடிவு
’என் சாவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்’-நிதிநிறுவன ஊழியர் விபரீத முடிவு

மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணம் முதலீடு செய்துள்ள ஏஜெண்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் - இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனமான ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஊழியர் மற்றும் ஏஜெண்ட் ஆக இருந்து வந்துள்ளார்.

இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் (05.08.2022) அன்று தமிழகம் முழுவதும் உள்ள நிதி நிறுவன அலுவலகம் மற்றும் ஏஜெண்ட்கள் வீடுகளில் சோதனை நடந்த நிலையில். வேலூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திற்க்கு சீல் வைத்தனர். இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com