மூணாறில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மீண்டும் Entry கொடுத்த படையப்பா யானை; அச்சத்தில் பொதுமக்கள்!

கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது.

இரு மாநில எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில், படையப்பா என்ற காட்டு யானை மிகவும் பிரபலம். உணவை தேடி குடியிருப்புகளிலும் கடை வீதிகளிலும் நடமாடும் இந்த யானை உணவு கிடைத்ததும் அமைதியாக திரும்பிவிடும். ஆனால் அதன் மிகப் பெரிய உருவமும், மிக நீண்ட தந்தங்களும் காண்போரை அச்சுறுத்தும். தற்போது இந்த படையப்பா யானை மீண்டும் மூணாறு எஸ்டேட் குடியிருப்பில் நடமாடி வருகிறது. இந்த யானை சாதுவான குணம் கொண்டது என்றாலும் இதன் குணம் எந்த நேரத்திலும் மாறலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com