ஹெலிகாப்டர் விபத்து: சுமார் 5 கி.மீ தூரத்திற்கு ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு

ஹெலிகாப்டர் விபத்து: சுமார் 5 கி.மீ தூரத்திற்கு ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு
ஹெலிகாப்டர் விபத்து: சுமார் 5 கி.மீ தூரத்திற்கு ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு

ஹெலிகாப்டர் விபத்து நடத்த பகுதியில் விமானப்படை அதிகாரிகளும் தமிழக காவல்துறையினரும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது எப்படி என அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விமானப்படையினரும் தமிழக காவல்துறையினரும் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான குழு 2வது நாளாக ஆய்வு செய்துவருகிறது. இன்று ட்ரோன் கேமராக்கள் மூலம் விபத்து பகுதியை விமானப்படை படம்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், காட்சிகளை 3D முறையில் மாற்றி ஆய்வுசெய்ய விமானப்படை முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு காட்சிகளை பதிவுசெய்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com