விஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வரதட்சணை புகார்

விஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வரதட்சணை புகார்
விஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வரதட்சணை புகார்

நடிகர் விஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமழிசையை சேர்ந்த திவ்யா என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். திவ்யாவுக்கும் , முத்து என்பவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக 200 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் பணம் கேட்டு தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக திவ்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளராகவுள்ள ஏஞ்சல் என்பவருடன், முத்து திருமணத்தை மீறிய பந்தத்தில் இருப்பதாகவும் திவ்யா குற்றஞ்சாட்டியுள்ளார். பணம் கேட்டு முத்து, ஏஞ்சல் ஆகியோர் மிரட்டுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com