அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் அவர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டார்கள், நேராக கூவத்தூர் சென்றுவிடுவார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், வேறு வழியில்லாமல் அதிமுக, சைதை துரைசாமியை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளதாக கூறினார். வேறு ஒரு கட்சியில் சேர தயாராக இருந்தவர் சைதை துரைசாமி என்று கூறிய அவர் அதிமுகவும், பாஜகவும் வெவ்வேறு கட்சிகள் அல்ல என்றும் விமர்சித்தார்.