சத்தீஸ்கர்: தசரா பண்டிகை ஊர்வலத்தில் மின்னல் வேகத்தில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு

சத்தீஸ்கர்: தசரா பண்டிகை ஊர்வலத்தில் மின்னல் வேகத்தில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு
சத்தீஸ்கர்: தசரா பண்டிகை ஊர்வலத்தில் மின்னல் வேகத்தில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஊர்வலமாக நடந்து சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்தில் பலர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் என்ற இடத்தில் துர்காதேவி சிலைகளை கையில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள் மீது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் நான்கு பேர் கை, கால் உடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com