ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பிரதமரை தொடர்புபடுத்தி ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில், ‘நான் தான் பாலா’ என்ற கணக்கில், விபத்து குறித்தும் அதில் பிரதமரை தொடர்புபடுத்தியும் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர், கருத்து பதிவிட்ட நபரைத் தேடி வருகின்றனர்.