கோழிகளை பிரிய மனமின்றி கதறி அழுத சிறுவன்: பிஞ்சு உள்ளம் கண்டு நெகிழும் நெட்டிசன்கள்

கோழிகளை பிரிய மனமின்றி கதறி அழுத சிறுவன்: பிஞ்சு உள்ளம் கண்டு நெகிழும் நெட்டிசன்கள்

கோழிகளை பிரிய மனமின்றி கதறி அழுத சிறுவன்: பிஞ்சு உள்ளம் கண்டு நெகிழும் நெட்டிசன்கள்
Published on

தான் செல்லமாக வளர்த்த கோழிகள் இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிறுவன் சாலையில் விழுந்து கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிக்கிமை சேர்ந்த ஆறு வயது சிறுவன், தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழிகள் இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லப்பட்டு, வெட்டப்படும் என்பதை அறிந்த பிஞ்சுக் குழந்தை, தனது கோழிகளை எடுத்துச் செல்வதைக் கண்டு கதறி அழுதான்.

கோழிகளை சாப்பிடப் போவதாகக் கூறியதால் அதிர்ச்சியடைந்த சிறுவன், ஒரு கட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, தனது கோழிகளை விட்டுவிட்டுச் செல்லுமாறு கூறி கதறினார். இந்தக் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் உள்ளத்தை பெரும்பாலானோர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com