மகாராஷ்ட்ரா: கர்ப்பிணி என்றும் பாராமல் வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்

மகாராஷ்ட்ரா: கர்ப்பிணி என்றும் பாராமல் வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்
மகாராஷ்ட்ரா: கர்ப்பிணி என்றும் பாராமல் வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கர்ப்பிணி என்றும் பாராமல் பெண் வனத்துறை அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதாரா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். மூன்று மாத கர்ப்பிணியான இவரை பல்சவாடே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், கடுமையாக தாக்கியுள்ளார். வனத்துறை ஒப்பந்த ஊழியர்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் அழைத்து சென்றது ஏன் என அந்த பெண் அதிகாரி கேள்வி எழுப்ப, ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் மோசமாக அவரை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பெண் அதிகாரியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com