சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற முதியவர் மீது தாக்குதல்: வெளியான சிசிடிவி காட்சிகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற முதியவர் மீது தாக்குதல்: வெளியான சிசிடிவி காட்சிகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற முதியவர் மீது தாக்குதல்: வெளியான சிசிடிவி காட்சிகள்
Published on

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரவு நேரத்தில் சாமி கும்பிட சென்ற முதியவரை கோயில் பணியாளர்கள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரவு நேரத்தில் காளிமுத்து என்ற முதியவர் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது, நடை சாத்திய பிறகு கோயிலுக்குள் வரக்கூடாது எனக் கூறி பணியாளர்கள் அவரை வெளியே அனுப்பியுள்ளனர். அப்போது முதியவருக்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வெளியே சென்ற முதியவர் அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்தார். அப்போது அங்கு சென்ற கோயில் பணியாளர்கள், முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோயில் பணியாளர்கள் 4 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com