ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உடல்களை அடையாளம் கண்டது எப்படி?

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உடல்களை அடையாளம் கண்டது எப்படி?
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உடல்களை அடையாளம் கண்டது எப்படி?

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேரின் உடல்கள் தீவிர ஆய்வுக்கு பின்னரே அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 உடல்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த காட்டேரி பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 4 பேரில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 80% தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் இருந்த நிலையில் 4 பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. 4 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்த நிலையில் சேகரிக்கப்பட்டதால் உடல்களை அடையாளம் காண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னரே எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக எலும்பு மற்றும் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எலும்பு, முடி ஆகியவற்றை டிஎன்ஏ சோதனை செய்வதன் மூலம் வயதை கணிக்க முடியும் என்றுமருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எலும்புகளை வைத்து இறந்தவர் ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com