'செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என கூறும் அண்ணாமலை என்ன மெய்ஞானியா?'-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என கூறும் அண்ணாமலை என்ன மெய்ஞானியா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை -  ஜெயகுமார்
அண்ணாமலை - ஜெயகுமார் File Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் கருத்துகளை தெரிவிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் அண்ணாமலைக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்.

மேலும் அவர், ''விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் கொச்சைப்படுத்த கூடாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வை அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என கூறும் அண்ணாமலை மெய்ஞானியா? அண்ணாமலையை விட நன்றாக கிண்டல் செய்ய அதிமுகவுக்கு தெரியும்" என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com