புதுக்கோட்டை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நா.த.க. வேட்பாளர் .. இறுதியில் நிகழ்ந்த ட்விஸ்ட்!

புதுக்கோட்டை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நா.த.க. வேட்பாளர் .. இறுதியில் நிகழ்ந்த ட்விஸ்ட்!
புதுக்கோட்டை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நா.த.க. வேட்பாளர் .. இறுதியில் நிகழ்ந்த ட்விஸ்ட்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

இலுப்பூர் பேரூராட்சி 3ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட செல்வம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அதே வார்டில் போட்டியிடும் லட்சுமணன் என்பவர் விடுத்த மிரட்டலை செல்வம் நிராகரித்ததால் அவர் கடத்தப்பட்டதாக நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த செல்வம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

அப்போது அங்கு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர், பின் வாசல் வழியாக செல்வத்தை அழைத்தச்சென்று வேட்புமனுவை திரும்பப் பெறச் செய்துவிட்டதாகக்கூறி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கூறி செல்வம் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com