திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள துணிக் கடையில் துணி வாங்குவது போல் சென்ற இளைஞர், ட்ரையல் ரூமில் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக துணிகளை அணிந்துள்ளார். மேலும், தமது லுங்கியிலும் சில துணிகளை சுருட்டி வைத்துள்ளார். சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவானதைக் கண்ட கடை ஊழியர்கள், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து அவர் சுருட்டி வைத்த துணிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.