விவாகரத்து செய்த மனைவிக்கு 5,500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - பிரிட்டன் நீதிமன்றம்

விவாகரத்து செய்த மனைவிக்கு 5,500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - பிரிட்டன் நீதிமன்றம்
விவாகரத்து செய்த மனைவிக்கு 5,500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - பிரிட்டன் நீதிமன்றம்

விவாகரத்து செய்த மனைவிக்கு துபாய் ஆட்சியாளர் 5,500 கோடி இழப்பீடு வழங்க பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தாம், தனது ஆறாவது மனைவியான பிரிட்டனைச் சேர்ந்த ஹயா பிந்த் அல் உசைனை அண்மையில் விவாகரத்து செய்தார். 72 வயதான துபாய் ஆட்சியாளரிடம் இழப்பீடு கேட்டு பிரிட்டன் நீதிமன்றத்தில் ஹயா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹயா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு ஷேக் முகமது பின் ரஷீத் 5,500 கோடி ரூபாயை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீடுதான் பிரிட்டன் வரலாற்றில் விவாகரத்துக்கான அதிகபட்ச செட்டில்மென்ட் தொகையாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com