மாணவியிடம் ஆசைகாட்டி மோசம் செய்த வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது

மாணவியிடம் ஆசைகாட்டி மோசம் செய்த வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது
மாணவியிடம் ஆசைகாட்டி மோசம் செய்த வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது

திருமண ஆசைகாட்டி 12-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை ஆவடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சென்னை ஆவடி, ராம்நகரில் வசித்து வரும் தம்பதியின் 17வயது மகள் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி தனது வீட்டில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இருந்தபோதிலும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உடனே இது குறித்து பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் காளிராஜ், தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் பள்ளி மாணவியை ஆவடி, காமராஜர் நகர், ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது. 


இதனைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில் வாலிபர் விக்ரமை தாம்பரம் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், போலீசார் அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர். போலீசார் விக்ரமை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விக்ரமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com