ரைஸ்மில் பாய்லரில் விழுந்த கூலித் தொழிலாளி... பரிதாபமாக உயிரிழப்பு

ரைஸ்மில் பாய்லரில் விழுந்த கூலித் தொழிலாளி... பரிதாபமாக உயிரிழப்பு
ரைஸ்மில் பாய்லரில் விழுந்த கூலித் தொழிலாளி... பரிதாபமாக உயிரிழப்பு

தாராபுரம் அருகே ரைஸ் மில்லில் 30 அடி பாய்லரில் விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (47). திருமணமான இவர், தாராபுரத்தில் உள்ள அண்ணாமலை ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ரைஸ் மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜீவானந்தம் எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி 30 அடி ஆழத்தில் உள்ள பாய்லரில் கிடந்த ஜீவானந்தத்தின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவத்தை தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மகேந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com