ஓரிருநாளில் நல்ல முடிவு எட்டப்படும் - ஓபிஎஸ்

ஓரிருநாளில் நல்ல முடிவு எட்டப்படும் - ஓபிஎஸ்
ஓரிருநாளில் நல்ல முடிவு எட்டப்படும் - ஓபிஎஸ்
Published on

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளின் இணைப்பு கடைசி நேரத்தில் தள்ளிப் போன நிலையில், ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

அதிமுக இரு அணிகளை இணைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னையில் தனித் தனியாக நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். மாலை 5 மணியளவில் தொடங்கிய ஆலோசனை சுமார், 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ஆலோசனையில் நல்ல முடிவு எட்டப்பட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அணிகளின் இணைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக நேற்று இரவு இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இன்றி இரு அணிகளும் அமைதி காத்தனர். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும், ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com