"ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது!" - ரிஷப் பன்ட்

"ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது!" - ரிஷப் பன்ட்
"ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது!" - ரிஷப் பன்ட்

ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட சீனியர்கள் என்னுடன் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சரியான பாதையில் செல்கிறது என்று டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. இதில் டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை அளித்தது. ரிஷப் பன்ட் கேப்டன்சியும் சிறப்பாக இருந்ததாக பலரும் புகழ்ந்தனர்.

இது குறித்து ரிஷப் பன்ட் பேசும்போது "ஒரு விக்கெட் கீப்பராக இருப்பதால் என்னால் ஒரு போட்டியின் தன்மையை நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அணியின் நிர்வாகத்தில் சீனியர்களுடன், ரிக்கி பாண்டிங்கும் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சரியான திசையில் சிறப்பாக செயல்படுகிறது என நினைக்கிறேன்" என்றார்.

மேலும் "கொரோனா காலத்தில் கிரிக்கெட் விளையாடுவது சவாலாகதான் இருக்கிறது. ஆனால் ஒரு அணியாக இப்போது நாங்கள் அணிக்கு வெளிய நடப்பது குறித்து யோசிக்கவில்லை. எங்களை மிகவும் பாதுகாப்பாக பிசிசிஐ வைத்திருக்கிறது அதனால் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே யோசிக்கிறோம். ஆட்டங்களை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியும் புதிது என நினைத்தே களம் காண்கிறோம்" என்றார் ரிஷப் பன்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com