ஆட்சி நிலைக்குமா? ஸ்டாலின் சந்தேகம்

ஆட்சி நிலைக்குமா? ஸ்டாலின் சந்தேகம்
ஆட்சி நிலைக்குமா? ஸ்டாலின் சந்தேகம்

சட்டப்பேரவை கூடுவதற்குள் அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறிதான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், திண்டல் அருகே காரப்பாறையில் உள்ள குளத்தை தி.மு.க-வினர் இன்று தூர் வாரினர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ”சட்டப்பேரவை கூடுவதற்குள் அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான். தற்போது அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதுடன், எத்தனை அணிகளாக உடையும் எனத் தெரியவில்லை. ஆட்சி நிலைத்து பேரவைக் கூடினால், திமுக தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com