தகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா? உ‌த்தராகண்டில் நடந்தது என்ன?

தகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா? உ‌த்தராகண்டில் நடந்தது என்ன?
தகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா? உ‌த்தராகண்டில் நடந்தது என்ன?

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டிருக்கும்நிலையில் அது ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக முடியும் எனக் கூறப்படுகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த எம்.எல்.ஏ.க்கள் 18 தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும் இந்த நடவடிக்கை சட்டப்படி செல்லாது என்று பல்வேறு வழக்கறிஞர்களும், அரசியல் ஆலோசர்களும் கூறிவருகின்றனர். 

இருப்பினும், தமிழக அரசியல் வரலாற்றிலும், இந்திய அளவில் பிற மாநிலங்களில் நடைபெற்ற சில முன்னுதாரணங்களை சுட்டுக் காட்டி தனது நடவடிக்கையை சாதகமாக மாற்ற எடப்பாடி அணியால் முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு கடந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் உத்தராகண்டில் நடைபெற்ற நிகழ்வு உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 9 பேர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்களை தகுதி நீக்குவதாக சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ஹரீஷ் ராவத் பேரவையில் நடத்த‌விருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதியிழப்பு செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. 

இது தொடர்பான வழக்கில் உத்தராகண்ட் உயர் நீதிமன்‌றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டுமே தகுதி நீக்கப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என உத்தரவிட்டன. இதையடுத்து‌ ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com