\
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தராதது ஏன்?-  முதல்வர் பழனிசாமி விளக்கம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தராதது ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தராதது ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்
Published on

முன்னாள் முதலமைச்சர்கள் என்பதால் காமராஜர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோரை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுப்பு தெரிவித்ததாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே காரணத்திற்காகத்தான் கருணாநிதியின் உடலையும் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் மறுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி தர வேண்டும் என திமுக தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய திமுக, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com