100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட தெப்பக் குளத்தில் நீச்சல் பழகிய மாணவன் உயிரிழப்பு

100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட தெப்பக் குளத்தில் நீச்சல் பழகிய மாணவன் உயிரிழப்பு
100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட தெப்பக் குளத்தில் நீச்சல் பழகிய மாணவன் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளாஸ்டிக் கேனை உடலில் கட்டிக் கொண்டு குளத்தில் நீச்சல் பழகிய பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவூத்தில் அமைந்திருக்கும் உதயகிரி நாதர், சடதாரியம்மன், கருப்பசாமி கோயில், ஆஞ்சநேயர் கோயிலோடு மலை உச்சியில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது, இக்கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் மாணவர்கள் குளிப்பது வழக்கம். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாவூத்து தெப்பக்குளத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் வத்திராயிருப்பு வெள்ளாளர் நடுத்தெருவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் சரவணன் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். 

நீச்சல் தெரியாத சரவணன் தனது உடலில் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனை கட்டிக் கொண்டு நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இந்த உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குளத்தில் குளிக்கும்போது நீரில் முழ்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் இந்த குளத்தில் குளிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பிற்காக காவவரை நியமிக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com