துளிர்க்கும் நம்பிக்கை: நெசவாளர் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி

துளிர்க்கும் நம்பிக்கை: நெசவாளர் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி
துளிர்க்கும் நம்பிக்கை: நெசவாளர் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஊரடங்கால் வறுமையில் வாடிய நெசவாளர் குடும்பத்திற்கு 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலமாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் உதவி கோரியிருந்தார். இதனையடுத்து ஜெயங்கொண்டத்தில் உள்ள மாடர்ன் கல்வி நிறுவனத்தை சேர்ந்த சுரேஷ் உணவுப் பொருட்களை வழங்கினார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கையொன்றுக்கு செய்யப்பட்ட உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் பணியில், எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com