"தோனியிடம் இருந்து இன்னும் நிறைய சிக்ஸர்கள் வரும்" - சுனில் கவாஸ்கர்

"தோனியிடம் இருந்து இன்னும் நிறைய சிக்ஸர்கள் வரும்" - சுனில் கவாஸ்கர்
"தோனியிடம் இருந்து இன்னும் நிறைய சிக்ஸர்கள் வரும்" - சுனில் கவாஸ்கர்

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனியிடமிருந்து இன்னும் நிறைய சிக்ஸர்களை எதிர்பார்க்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் 18 ரன்களில் கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு அசத்தலான சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் போது "தோனி விளையாடுவதை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் இருக்கும். அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார். 4 ஆம் இடத்திலோ அல்லது 5 ஆம் இடத்திலோ ஆடினால், இன்னும் நிறைய சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுவார் தோனி" என்றார்.

மேலும் "பெஞ்சில் ராயுடு, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் பேட்டிங் செய்ய தயாராக இருந்தபோது முன்னதாக களமிறங்கி சின்ன இன்னிங்ஸ் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தோனி. அது அணியினருக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்விதமாக இருந்தது" என்றார் சுனில் கவாஸ்கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com