நாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 

நாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 

நாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 
Published on

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கிய 113 கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள், பருத்திகோட்டை நாட்டார் சங்கத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீராததால், போராட்டம் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாக 113 கிராமங்களைச் சேர்ந்த, ஒரு சமுதாய மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓட்டுகள் மொத்தமாக சுமார் 57 ஆயிரத்திற்கு மேல் என்பதால் இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாக உன்னகுளம், மூலைகரைதட்டி,‌ சிங்கநேரி, பருத்தநாதபுரம் உள்ளிட்ட 15 வாக்குச்சாவடிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com