6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு

6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு
6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்டங்களாக, 424 தொகு‌திகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலை யில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிக‌‌பட்சமாக 14 தொகு‌திகளில் தேர்தல் ‌நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர், பழைய ராஜீந்தர் நகர் வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று காலையிலேயே வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, குருகிராமில் உள்ள பின்கிரஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோல போபால் பாஜக வேட்பாளர், பிரயக்யா சிங் தாகூர், வரிசையில் நின்று வாக்களித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com