நைனிடாலில் மழை வெள்ளத்தில் அகப்பட்ட மக்களை இந்திய ராணுவத்தினர் ஒன்றிணைந்து பத்திரமாக மீட்ட வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நைனிடாலில் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லும் பணியில் இந்திய ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் வீரர்கள் கைகோர்த்து நின்று மக்கள் கடந்து செல்ல உதவிய வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ராணுவத்தினருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Salute these Bravehearts <a href="https://twitter.com/hashtag/Nainital?src=hash&ref_src=twsrc%5Etfw">#Nainital</a> <a href="https://twitter.com/hashtag/Uttrakhand?src=hash&ref_src=twsrc%5Etfw">#Uttrakhand</a> <a href="https://t.co/ZdO5Fxvp3p">pic.twitter.com/ZdO5Fxvp3p</a></p>— Srinivas BV (@srinivasiyc) <a href="https://twitter.com/srinivasiyc/status/1450385053809201153?ref_src=twsrc%5Etfw">October 19, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>