\
விரைவில் 4 நகரங்களில் ‌விமான நிலைய விரிவாக்கப்பணி: விஜயபாஸ்கர்

விரைவில் 4 நகரங்களில் ‌விமான நிலைய விரிவாக்கப்பணி: விஜயபாஸ்கர்

விரைவில் 4 நகரங்களில் ‌விமான நிலைய விரிவாக்கப்பணி: விஜயபாஸ்கர்
Published on

சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கேள்விநேரத்தின்போது மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் பி.டி.ஆர் தியாகராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலுரை ஆற்றிய அவர் இதனை‌க் கூறினார். மேலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 618 ஏக்கர் நிலம் கையப்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய கருத்துரு பெற்று மாவட்ட ஆட்சியர் மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com