“உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து வாக்களியுங்கள்” - விஜயபாஸ்கர்

“உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து வாக்களியுங்கள்” - விஜயபாஸ்கர்

“உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து வாக்களியுங்கள்” - விஜயபாஸ்கர்
Published on

உழைத்து கருத்த தன் முகத்தை பார்த்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், உழைத்து கருத்துவிட்ட என்னைப்பார்த்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் “இரவு பகலாக உழைத்து வருகிறோம். என் உழைப்பை பார்த்து, கஷ்டத்தை பார்த்து, தூங்காத இந்தக் கண்களை பார்த்து, யாரையும் குறை சொல்லாத இந்த முகத்தை பார்த்து உங்களுக்காக உழைத்து உழைத்து களைத்து போயிருக்கிற என்னைப் பார்த்து தயவு செய்து இரட்டை இலை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 

உழைப்பதை தவிர, ஒரு திட்டத்தை கொண்டு வருவதை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை. அதற்கான நேரமும் எங்களுக்கு இல்லை” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com